வெளிநாடுகளிலிருந்து 222 இலங்கையர்கள் வருகை

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வரும் திட்டத்தின் கீழ், இலங்கையர்கள் 222 பேர் இன்று (11) இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

கட்டார், ஜேர்மனி, மாலைதீவு ஆகிய நாடுகளிலிருந்து குறித்த இலங்கையர்கள் கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்களை வந்தடைந்துள்ளனர்.

இன்று அதிகாலை 1.23 மணிக்கு, மத்தள விமான நிலையத்தை 42 இலங்கையர்கள் வந்தடைந்துள்ளதோடு, மீண்டும் அதிகாலை 5.22 மணிக்கு கட்டாரிலிருந்து வந்த மற்றுமொரு விமானத்தில் இலங்கையர் ஒருவர் நாடு திரும்பியுள்ளார்.

இன்று முற்பகல் 11.45 மணிக்கு, ஜேர்மனியிலிருந்து ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதேவேளை, இன்று நண்பகல் 12.15 மணிக்கு மாலைதீவின் மாலி நகரிலிருந்து இலங்கையர்கள் 178 பேர் மத்தள விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

Tue, 08/11/2020 - 15:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை