ஏப்ரல் 21 ஆணைக்குழு பொலிஸ் பிரிவில் சாகல

முன்னாள் சட்ட, ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் இன்று (21) காலை முன்னிலையாகியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில்  வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவை இன்று முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த செவ்வாய்க்கிழமை (18) குறித்தஆணைக்குழுவின் பொலிஸ் விசாரணை பிரிவிற்கு வருகை தந்த,முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, சுமார் 5 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Fri, 08/21/2020 - 11:19


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை