பாகிஸ்தான் ரி 20 தொடரிலிருந்து வெளியேறும் ஜேசன் ரோய்

உபாதை காரணமாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான ரி 20 தொடரிலிருந்து இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்டவீரரான ஜேசன் ரோய் விலகியுள்ளார்.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ரி 20 தொடருக்காக தெரிவாகிய இங்கிலாந்து வீரர்கள் குழாம் கடந்த வாரம் முதல் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. குறித்த பயிற்சிகளின் போது, ஜேசன் ரோய் தசை உபாதை ஒன்றினை எதிர்கொண்டிருந்தார்.

தொடர்ந்து பரிசோதனைகளுக்கு முகம்கொடுத்த ஜேசன் ரோய் சத்திரசிகிச்சை ஒன்றினை மேற்கொள்ள வேண்டும் என வைத்தியர்களினால் அறிவுறுத்தப்பட்டிருந்தார். இதனை அடுத்தே, பாகிஸ்தான் அணிக்கு எதிரான ரி 20 போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு அவருக்கு இல்லாமல் போயிருக்கின்றது. ஜேசன் ரோயிற்குப் பதிலாக பிரதியீட்டு வீரர் ஒருவர் பெயரிடப்படாத போதும் இங்கிலாந்து அணி அவுஸ்திரேலிய அணியுடன் எதிர்வரும் செப்டம்பர் 04ஆம் திகதி தொடக்கம் விளையாடவுள்ள மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடர்களுக்கு முன்னதாக பூரண உடற்தகுதியினை அவர் பெறுவார் என இங்கிலாந்து கிரிக்கெட் சபை தெரிவித்திருக்கின்றது.

Sat, 08/29/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை