வெளிநாட்டு 20 ஓவர் போட்டிகளில் 4 மாதம் விளையாடும் நியூசிலாந்து வீரர்

வெளிநாட்டு 20 ஓவர் போட்டிகளில் நியூசிலாந்து அணியின் சகல துறை வீரர் மிட்செல் சான்ட்னெர் 4 மாதம் விளையாடுகிறார். 8-வது கரீபியன் பிரீமியர் லீக் (சி.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் வருகிற 18-ந் திகதி முதல் செப்டம்பர் 10-ம் திகதி வரை நடக்கிறது.

13-வது ஐ.பி.எல். 20 ஓவர் போட்டி ஐக்கிய அரபு இராச்சியத்தில் செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறுகிறது.

கொரோனா தாக்கத்துக்கு மத்தியில் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நடைபெறும் இந்த இரண்டு போட்டிகளிலும் நியூசிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் மிட்செல் சான்ட்னெர் விளையாடுகிறார். அவர் தொடர்ச்சியாக 4 மாதம் வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்த வாரத்தில் சொந்த நாட்டை விட்டு புறப்படுகிறார். சி.பி.எல். போட்டியில் பார்படோஸ் டிரைடென்ட்ஸ் அணிக்காக விளையாடும் அவர் ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக களம் காணுகிறார். இதே போல் நியூசிலாந்தை சேர்ந்த பிரன்டன் மெக்கல்லம், டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் (சி.பி.எல்.) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (ஐ.பி.எல்.) அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றுகிறார்.

நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் சோதி சி.பி.எல். போட்டியில் செயின்ட் கிட்ஸ் அண்ட் நிவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்காக ஆடுகிறார்.

ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு சுழற்பந்து வீச்சு ஆலோசகராக இருக்க உள்ளார்.

Mon, 08/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை