ஈஸ்டர் தாக்குதல் 18 விசாரணை கோவைகள்; முழுமையாக இல்லை எனக் கூறி திருப்பி அனுப்பினார் சட்ட மாஅதிபர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுடன் தொடர்புடைய, மேலும் 18 முழுமைப்படுத்தப்படாத விசாரணை கோப்புகள் சட்ட மாஅதிபர் திணைக்களத்தினால் மீண்டும் பதில் பொலிஸ் மாஅதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.  

இது தொடர்பில் உரிய முறை யில் விசாரணைகளை நிறைவு செய்யுமாறு பதில் பொலிஸ் மாஅதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சட்ட மாஅதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி சட்டத்தரணி நிஷார ஜயவர்தன தெரிவித்துள்ளார். இதுவரை முழுமைப்படுத்தப்படாத 100 விசாரணை கோப்புகள் சட்ட மாஅதிபர் திணைக்களத்தால் பதில் பொலிஸ் மாஅதிபருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கடந்த காலங்களில் பொலிஸ் மாஅதிபரினால் பல்வேறு கோப்புகள் வழக்கு தொடர்வதற்காக அனுப்பப்பட்டன.இவற்றில் பூர்த்தி செய்யப்பட்ட கோப்புகள் தொடர்பில் வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Thu, 08/20/2020 - 09:21


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை