17 தாதியர் கல்லூரிகளை இணைத்து பல்கலைக்கழகம்

அடுத்த ஆண்டிலிருந்து கல்வி நடவடிக்ைக ஆரம்பம்

நாட்டில் முதலாவது தாதியர் பல்கலைக்கழகத்தின் பட்டப்படிப்புக்களை எதிர்வரும் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர்  பேராசிரியர் ஜனிதா லியனகே தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், நாட்டிலுள்ள 17தாதியர் கல்லூரிகளை ஒன்றிணைத்து தாதியர் பல்கலைக்கழகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. தாதியர்களுக்கான பட்டப்படிப்புக்கு என கல்வித் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். அப் பணிகள் தற்போது நிறைவுக்கட்டத்தை எட்டியுள்ளன.

தாதியர் பல்கலைக்கழகத்தினூடாக வருடமொன்றுக்கு 3ஆயிரம் பட்டதாரி தாதியர்களை உருவாக்க முடியும் என்றார்.

Thu, 08/27/2020 - 09:25


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை