இலங்கையில் சிக்கியிருந்த 174 பேர் இந்தியா பயணம்

இந்திய அரசின் ‘வந்தே பாரத் மிஷன்’;

நாடு திரும்ப முடியாமல் இலங்கையில் சிக்கியிருந்த 174 இந்திய பிரஜைகள் விசேட எயார் இந்தியா விமானம் மூலமாக கடந்த 25 ஆம் திகதி கொழும்பிலிருந்து டில்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கொவிட்19 காரணமாக நாடு திரும்ப முடியாத நிலையில் உலகளவில் சிக்கியிருக்கும் இந்திய பிரஜைகளை இந்தியாவுக்கு அழைத்துக்கொள்ளும், இந்திய அரசின் “வந்தே பாரத் மிஷன்” திட்டத்தினுடைய ஓர் அங்கமாக இந்த விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து கப்பல், விமான சேவைகள் மூலம் 2,000 க்கும் அதிகமான இந்திய பிரஜைகள் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் மேற்கொள்ளப்பட்ட பதிவுகளின் அடிப்படையில் இந்த விமானத்திற்கான பயணிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.  நாடு திரும்ப முடியாமல் இலங்கையில் தங்கியிருக்கும் இந்தியர்கள் இதுவரையில் தம்மை இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் இணையத்தளத்தில் பதிவு செய்ய தவறியிருப்பின் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள இணையத்தளத்தில் பதிவு செய்யுமாறு கோரப்படுகின்றனர்.

Fri, 08/28/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை