வெளிநாடுகளிலிருந்து 135 பேர் வருகை

- கட்டாரிலிருந்து 47 பேர்

- தாய்லாந்திலிருந்து 88 பேர்

கட்டாரிலும் தாய்லாந்திலும் சிக்கியிருந்த இலங்கையர்கள் 135 பேர் மீண்டும் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

இன்று (21) அதிகாலை 1.20 மணிக்கு, கட்டாரின் டோஹாவிலிருந்து 47 பேரை ஏற்றிய கட்டார் விமான சேவைக்கு சொந்தமான QR 668 எனும் விமானம், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

தாய்லாந்தின் பாங்கொக் நகரிலிருந்து 88 பேரை ஏற்றிய ஶ்ரீ லங்கன் எயார்லைன்ஸின் UL 403 எனும் விமானம் இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

இவ்வாறு வருகை தந்த அனைவரும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதை தொடர்ந்து, தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.  

Fri, 08/21/2020 - 11:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை