11 மாணவர்கள் மீது வாகனத்தை செலுத்திய சாரதி கைது

அரலகங்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போகஸ் சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்துச் சம்பவம் தொடர்பில், கெப் வாகனச் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த பிரதேசத்தில் நேற்று(09) மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, 11 சிறுவர்கள் காயமடைந்துள்ளனர்.

தெஹியத்தகண்டி பிரதேசத்திலிருந்து அரலகங்வில பிரதேசம் நோக்கி பயணித்த கெப் வாகனம், பிரத்தியேக வகுப்புக்கு சென்று வந்த 14, 16 வயதுடைய சிறுவர்கள் மீது மோதி விபத்துச் சம்பவித்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதில் காயமடைந்த04 பேர் பொலன்னறுவை வைத்தியசாலையிலும், 07 பேர் அரலகங்வில வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டனர்.

படுகாயமடைந்த நிலையில் அரலகங்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட16 வயது மாணவர்  ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ரத்மல்தென்ன பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவனே உயிரிழந்துள்ளான்.

இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் அரலகங்வில பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Mon, 08/10/2020 - 10:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை