மேலும் 10,000 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு

- ஜனாதிபதி, பட்டதாரிகளிடம் நேரடியாக தெரிவித்தார்

மேலும் 10,000 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கு, அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இன்று (19) முற்பகல் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து, ஜனாதிபதி செயலகத்திலிருந்து வெளியேறிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, செயலக வளாகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த வேலையற்ற பட்டதாரிகளைச் சந்தித்து இதனை தெரிவித்தார்.

நாங்கள் எல்லோருக்கும் தொழில் வழங்குவோம். இன்று அமைச்சரவையில் மேலும் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பை பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, வெய்யிலில் வாடாமல், வீடுகளுக்கு செல்லுங்கள் என அவர்களிடம், ஜனாதிபதி தெரிவித்தார்.

Wed, 08/19/2020 - 15:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை