முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார இன்று ஆஜர்

2011ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இறுதியாட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஆட்டநிர்ணய சதி தொடர்பில் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவுக்கு வாக்குமூலம் வழங்குவதற்கு வருமாறு விளையாட்டு அமைச்சின் விளையாட்டு தவறுகள் தொடர்பான விசாரணை பிரிவு அழைப்பாணை விடுத்துள்ளது. 2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண போட்டித் தொடரின் இறுதி போட்டியில் ஆட்ட நிர்ணயம் செய்யப்பட்டதாக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பிலேயே அவர் இவ்வாறு வாக்குமூலம் வழங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று காலை 9 மணிக்கு அவரை ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.2011 உலகக் கிண்ண ஆட்டத்தின் போது இலங்கை அணித்தலைவராக குமார் சங்கக்கார செயற்பட்டார்.

இதேவேளை, இன்று காலை 10.15 மணியளவில் 2011ஆம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் முக்கிய சுழல் பந்துவீச்சாளராக விளையாடிய முத்தையா முரளிதரனை ஆஜராகுமாறும் விளையாட்டு தவறுகள் தொடர்பான விசாரணை பிரிவால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கிரிக்கெட் வீரர் உபுல் தரங்க நேற்று காலை 10.15 மணியளவில் விளையாட்டு தவறுகள் தொடர்பான விசாரணை பிரிவில் ஆஜரானார்.முன்னாள் வீரர் உபுல் தரங்க சுமார் 2 1/2 மணிநேரம் வாக்குமூலம் வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா நேற்று முன்தினம் ஆஜராகியிருந்தார்.(பா)

Thu, 07/02/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை