ஐ.தே.க இந்நாட்டு மக்களின் உயிர்நாடி என்கிறார் ரணில்

இரண்டு ஐக்கிய தேசியக் கட்சிகள் இல்லை எனவும் மாறாக ஒரே ஒரு கட்சியே இருப்பதாகவும் அந்த கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.  

நீர்கொழும்பில் நேற்று முன்தினம் (28) இடம்பெற்ற ஐ.தே.கவின் தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார்.  

டீ.எஸ் சேனாநாயக்காவால் உருவாக்கப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியால் நாட்டை கட்டியெழுப்ப முடிந்ததாகவும், ஐ.தே.க மக்களின் உயிர் நாடியாக மாறியுள்ளதாகவும் கூறினார். 

உண்மையான ஐக்கிய தேசிய கட்சியினர் கட்சியின் நிழலில் தரித்து நிற்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.  

வேறு கட்சிகளுக்கு அளிக்கும் வாக்குகள் ஒருபோதும் ஐ.தே.கவிற்கு அளிக்கும் வாக்குகளாக அமையாது எனவும் சில கட்சிகள் ஐ.தே.கவை தூற்றுகின்றன எனவும் அவர் கூறினார்.  

எமது கொள்கைகளை ஏற்றுக்கொள்ளா விடின் அங்கு செல்லுங்கள். அவ்வாறு சென்றாலும் வேறு நபரின் உடையை அணிந்துகொண்டு செல்ல வேண்டாம். மற்​றையவரின் தொப்பியை அணிந்து செல்ல வேண்டாம். மற்றையவரின் காலணியை அணிந்தும் செல்ல வேண்டாம் எனவும் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார். 

Thu, 07/30/2020 - 07:34


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை