கரைக்கின்றவன் கரைத்தால் கல்லும் கரையும்

மக்களின் அபிலாஷைகள் நிச்சயம் நிறைவேறுமென உறுதி

கரைக்கிறவன் கரைத்தால் கல்லும் கரையுமென்பது போன்று யுத்தம் நிறைவடைந்த இந்த 10 வருடத்திற்குள் முடிந்தமானவற்றை மாற்றியிருக்கின்றோம்.ஆனால் மக்கள் எமக்கு போதிய ஆணையை தரவில்லை. விரலுக்கு ஏற்ற வீக்கம் என்ற வகையில் தான் எமது செயற்பாடுகள் அமைந்திருந்தன என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

கிளிநொச்சி, கோணாவில் பிரதேசத்தில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள்

சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர்,..

தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற நியாயமான அபிலாஷைகளுக்கு எதிராக எந்தவிதமான அழுத்தங்கள்,தடைகள் ஏற்பட்டாலும் அவை நிறைவேற்றப்படும்.

நாங்கள் முன்வைத்த நடைமுறைச் சாத்தியமான அணுகுமுறைகள்,வேலைத்திட்டங்கள் அதன் வழிமுறைகள் சரியானதென வரலாறு நிரூபித்து வருகின்றது. எனவே சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி மக்கள் ஈ.பி.டி.பி.கட்சியின் கரங்களை பலப்படுத்துங்கள் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

Sat, 07/25/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை