தெல்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விக்டோரிய நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
நேற்று (21) பிற்பகல் 1.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கென்கல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கண்டி பொலிஸ் கடற்படை பிரிவினரும் கொழும்பு கடற்படை தலைமையக சுழியோடிகளும் இணைந்து காணாமல் போன இளைஞரை தேடி வருகின்றனர்.
இது தொடர்பில் தெல்தெனிய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Wed, 07/22/2020 - 09:07
from tkn