தனிமைப்படுத்தல் பிரதேசங்களில் வாக்காளர் அட்டை விநியோகம் இடைநிறுத்தம்

கொரோனா பரவல் நிலையை கருத்திற்கொண்டு நபர்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ள பிரதேசங்கள் மற்றும் வீடுகளுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக, தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய, இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார்.

ஆயினும், எதிர்காலத்தில் சுகாதார ஆலோசனைகள் மற்றும் ஏனைய ஆலோசனைகளை பின்பற்றி குறித்த நடவடிக்கைகளை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாகவும், அவர் தெரிவித்தார்.

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ளும்போது கையெழுத்து இடுவதற்காக தனிப்பட்ட பேனாக்களை பயன்படுத்துமாறும், பொதுமக்களிடம் தபால் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Thu, 07/16/2020 - 12:05


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை