அம்பாறைக்கு கருணா அம்மான் பாதுகாப்பு அரணாக திகழ்வார்

பலவழிகளால் பாதிக்கப்பட்டுள்ள அம்பாறை மாவட்ட தமிழ் மக்களைப் பாதுகாக்கும் முதுகெலும்புள்ள துணிவுள்ள பாரிய அரணாக கருணா விளங்குவார் என்பதில் ஐயமில்லை என்று அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குணசேகரம் சங்கர் நேற்று முன்தினம் பொத்துவிலில் இடம்பெற்ற முதலாவது கூட்டத்தில் உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.

பொத்துவில் தேர்தல் அலுவலகத் திறப்பு விழா நேற்று வேட்பாளர் எஸ்.ரமணன் தலைமையில் நடைபெற்றது. அங்கு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

திறப்பு விழாவுக்கு கருணா அம்மானும் கலந்து கொண்டிருந்தார்.

அங்கு முன்னாள் எம்.பி சங்கர் மேலும் உரையாற்றுகையில்:

தமிழன் தன்மானவுள்ளவன்.விதியற்ற தமிழன் கதியற்றுப்போனான் என்ற நிலையை மாற்றியமைத்து புதுவிதி செய்ய கருணா அம்மான் அம்பாறை வந்துள்ளார்.

அவரது வருகை அம்பாறையில் பாரிய புரட்சியை மாற்றத்தை உண்டுபண்ணி வருகிறது என்பது மட்டும் உண்மையாகும். எதிரணியினர் வியந்து செய்வதறியாது திணறுகின்றனர்.

தமிழ் மக்கள் தன்மானத்தை இழக்காது அரசியல் தீர்வுடன் அபிவிருத்திப் பாதையில் பயணிப்பதே எமது இலட்சியமாகும். தீர்வு தீர்வு என்று காலத்தை கடத்தியதுதான் மிச்சம். ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் வந்து போகும் வேட்டிகளை இன்னும் நம்பினால் நாம் நடுக்கடலில் தத்தளிக்க வேண்டிவரும்.

அம்பாறை மாவட்டத்தில் இரவுவேளையில் உயரத்திலிருந்து பார்த்தால் எங்கெல்லாம் இருட்டாக இருக்கிறதோ அவையெல்லாம் தமிழ்ப் பிரதேசங்கள் என்று அடித்துக் கூறலாம். இதுதான் த.தே.கூட்டமைப்பு இதுவரை காலமும் செய்த சேவை.

தமிழ மக்களை விற்றுப்பிழைக்கும் கூட்டம் அது. மக்களை குட்டிச்சுவராக்கிவிட்டு தாங்கள் மட்டும் ராஜபோகம் அனுபவிக்கின்றனர்.

எந்தவொரு எம்.பி. வியாபாரம் செய்கிறானோ அவன் மக்களுக்கு சேவை செய்யமாட்டான். ஏனெனில் அவனுக்கு வியாபார கணக்கு ழக்கு இலாபநட்டம் பார்க்கவே நேரம் போதுமானது என்றார்.

காரைதீவு குறூப் நிருபர்

Sat, 07/18/2020 - 07:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை