ஆட்டோவிலிருந்து தவறி வீழ்ந்து சாரதி பலி

கடவத்தை பிரதேசத்தில் முச்சக்கரவண்டிச் சாரதி ஒருவர், முச்சக்கரவண்டியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

கடவத்தை பொலிஸ் பிரிவிற்குட்ட எடேரமுல்ல – உஸ்வத்த வீதியில் நேற்று (07) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உஸ்வத்தை பிரதேசம் நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியிலிருந்தே குறித்த சாரதி கீழே தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த முச்சக்கரவண்டியானது, குறித்த வீதியில் வலதுபுறமாக சென்று அங்கிருந்த மின்கம்பத்துடன் மோதியுள்ளது.

இதன்போது குறித்த சாரதி, அவ்வீதியால் பயணித்த ஒருவரினால் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்துள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வத்தளை, ஹுனுப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் கடவத்தை பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Wed, 07/08/2020 - 09:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை