ஒரு மாதத்தில் இருவரை திருமணம் செய்த சிறுமி

ஒரு மாதத்திற்குள் இருவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்ட 12 வயது சிறுமியை கென்ய அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

தலைநகர் நைரோபியின் நரோக் கெளண்டி வெஸ்ட் பகுதியைச் சேர்ந்த சிறுமியின் தந்தை 51 வயது ஒருவருக்கு கட்டாயத் திருமணம் செய்து வைத்துள்ளார்.

அங்கிருந்து அந்த சிறுமி தப்பியதை அடுத்து 35 வயது ஆடவர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் சிறுவர் உரிமை ஆர்வலர்கள் மற்றும் அரச அதிகாரிகள் அவரை மீட்டுள்ளனர்.

18 வயதுக்கு கீழ்ப்பட்ட ஒருவரை திருமணம் செய்வது கென்யாவில் சட்டவிரோதமாகும்.

“தந்தை அவரை வயதான ஒருவருக்கு திருமணம் முடித்து வைத்துள்ளார். வயதில் குறைந்த ஒருவரை திருமணம் முடிப்பதைத் தவிர அந்த சிறுமிக்கு வேறு வழி இருக்கவில்லை” என்று சிறுவர் உரிமை அமைப்பைச் சேர்ந்த ஜோசுவா கபுடா குறிப்பிட்டுள்ளார்.

Fri, 07/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை