பத்மா சோமகாந்தன் காலமானார்

இலங்கையின் மூத்த பெண் எழுத்தாளரான திருமதி பத்மா சோமகாந்தன் (வயது 89) நேற்றுமுன்தினம் கொழும்பில் காலமானார். யாழ். வண்ணார்பண்ணையில் 05.-03-. 1931 இல் பிறந்த

பத்மா சோமகாந்தன் தனது 17 வயதில் எழுதத் தொடங்கியவர். கொழும்பில் வாழ்ந்து வந்த அவர் தனது இறுதிக் காலம் வரை சுறுசுறுப்பான படைப்பாளியாக இலக்கியப் பணி புரிந்து வந்துள்ளார்.

எழுத்தாளராக, பேச்சாளராக, இலக்கியவாதியாக அவர் தமிழ் கூறும் உலகெங்கும் புகழுடன் வாழ்ந்தவராவார். அன்னாரின் மறைவு குறித்து முக்கியஸ்தர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். திருமதி பத்மா சோமகாந்தன் அவர்களின் பூதவுடல் இன்று 17ம் திகதி காலை 9.00 மணி முதல் பொரளை ஜயரத்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 19ந்திகதி ஞாயிறு காலை 10 மணி முதல் 12 மணி வரை இறுதிக் கிரிகைகள் நடைபெற்ற பின் கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Fri, 07/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை