சட்டவிரோதமாக வெட்டப்பட்ட தேக்கு மரங்களுடன் ஒருவர் கைது

சட்டவிரோதமாக வெட்டப்பட்ட தேக்கு மரங்களுடன் ஒருவர் கைது-Timber Smuggling-Oddamavadi

ஓட்டமாவடி பிரதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக வெட்டப்பட்டு, வியாபாரத்திற்கு கொண்டு செல்லப்பட்ட இருபத்தி இரண்டு தேக்கு மரங்கள் மற்றும் சிறியரக பட்டா ரக வாகனமும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக வெட்டப்பட்ட தேக்கு மரங்களுடன் ஒருவர் கைது-Timber Smuggling-Oddamavadi

நேற்று (18) மாலை பொலிஸாரினால் குறித்த மரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

இதன்போது குறித்த மரத்தினை வியாபாரத்திற்காக கொண்டு சென்ற சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.

சட்டவிரோதமாக வெட்டப்பட்ட தேக்கு மரங்களுடன் ஒருவர் கைது-Timber Smuggling-Oddamavadi

சட்டவிரோதமாக வெட்டப்பட்ட தேக்கு மரங்களுடன் ஒருவர் கைது-Timber Smuggling-Oddamavadi

(கல்குடா தினகரன் நிருபர் - எஸ்.எம்.எம்.முர்ஷித்)

Sun, 07/19/2020 - 11:09


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை