காட்டுக்குள் சிக்கிய யாழ். பல்கலை மாணவர்கள் மீட்பு

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முத்தையன்கட்டு காட்டுப்பகுதியில், யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவர்கள் 09 பேர் சிக்கியதை தொடர்ந்து, பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

நேற்று(15), புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முத்தையன்கட்டு காட்டுப்பகுதிக்கு ஆய்வுச் சுற்றுலாவுக்காக  குறித்த மாணவர்கள் புறப்பட்டுச் சென்றிருந்தனர். இவ்வாறு சென்ற மாணவர்கள் குறித்த காட்டுப்பகுதியில் சிக்கியமை தொடர்பில் கிடைத்த தகவலைத் தொடர்ந்து ஒட்டுசுட்டான் பொலிஸார்  தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.

ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலைய அதிகாரிகளும் பிரதேசவாசிகளும், இலங்கை இராணுவத்தினரின் 64ஆவது படைப்பிரிவு தலைமையகத்தின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தாகவும், இதன்போது குறித்த மாணவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்டுள்ள மாணவர்களை, இன்று (16)  காலை ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்திற்கு  அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

Thu, 07/16/2020 - 09:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை