உயிர்த்தஞாயிறு தாக்குதலின் எதிரொலி; சட்டியிலிருந்து அடுப்பில் வீழ்ந்த எமது நாட்டின் பொருளாதாரம்

தொழில் நிபுணர்களுடனான சந்திப்பில் பிரதமர் மஹிந்த

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலினால்நாட்டின் பொருளாதாரம் சட்டியிலிருந்து அடுப்பினுள் வீழ்ந்தது. கடந்த நவம்பர் மாதம் நாங்கள் அதிகாரத்திற்கு வந்தவுடன்வரிச்சுமையை குறைத்து வட்டி வீதத்தைகுறைத்து பொருளாதாரத்திற்கு சேலைன் (Salaine) வழங்குவதற்கு எமக்கு நேர்ந்தது. அந்த சந்தர்ப்பத்தில்தான் கொவிட்-19 தொற்று இலங்கைக்குவந்தது. அதனால்எங்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய சவால் அற்பமானதல்ல.

நல்லாட்சி அரசாங்கம் செய்தவற்றை இலகுவில் நியாயப்படுத்தமுடியாது. அவர்கள் ஆட்சியை பொறுப்பேற்றதோடு சீன திட்டங்கள் அனைத்தையும் நிறுத்தினர். அரச சொத்துக்கள் அல்லது வேறு விடயங்கள் தொடர்பில் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படுவதற்கு முன்னர் அது தொடர்பிலான முன்மொழிவுகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதை கட்டாயமாக்கும் வகையிலான சட்டம் தயாரிக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 

கொழும்பில் நேற்று (29) நடைபெற்ற தொழில் நிபுணர்களுடனான சந்திப்பின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். 

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த பிரதமர், 

கொவிட் - 19 தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் இதுவரை ஜனாதிபதியினால் கொரோனா ஒழிப்பு செயலணி மற்றும் சுகாதார துறையில் வெற்றிகரமான முறையொன்றும் நிறுவப்பட்டுள்ளது. தற்போது இந்த பேசும் சந்தர்ப்பத்தில் கூட இலங்கைக்கு வரும் அனைத்து விமானங்களிலும் கொவிட் - 19 நோயாளர்கள் ஒருவர் அல்லது இருவர் உள்ளனர். இதனால் இலங்கையில் மீண்டும் நோயாளர்கள் தோற்றம் பெறக்கூடும். எனினும்இ எமது கொவிட் -19 ஒழிப்பு முறையை பயன்படுத்தி எவ்வாறான நிலைமையையும் கட்டுப்படுத்த முடியும் என்பதை ஏற்கனவே நிரூபித்துள்ளோம். அது நாம் பெற்ற பாரிய வெற்றியாகும். 

கொவிட் -19 தொற்று இலங்கைக்கு வரும்போதும் நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளினால் இலங்கையின் பொருளாதாரம் தரைமட்டமாகியே இருந்தது. 2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வரும்போது இருந்த சராசரி பொருளாதார வளர்ச்சி வீதம் 2019ஆம் ஆண்டின் இறுதியாகும் போது மூன்றில் ஒரு பங்கிற்கு குறைந்து இருந்தது. நாட்டின் மொத்த கடன் சுமை 74 வீதத்தினால் அதிகரித்திருந்தது. நல்லாட்சி அரசாங்கத்தின் நான்கரை ஆண்டு காலப்பகுதியில் இலங்கை அபிவிருத்தி பிணைமுறி கடன்பத்திரம், இறைமை பிணைமுறி வழங்கியதன் மூலம் மாத்திரம் 18 அமெரிக்க டொலர் பில்லியனுக்கும் அதிகமான அந்நிய செலாவணி கடன்களை பெற்றுள்ளனர். ரூபாயின் பெறுமதி 40 வீதத்தினால் வீழ்ச்சியடைந்திருந்தது. இந்த பொருளாதார சீர்கேட்டிற்கு எந்தவொரு சர்வதேச காரணமும் இருக்கவில்லை. 

அக்காலப்பகுதியில் அமெரிக்கா, ஜேர்மனி, இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகள் வேகமாக முன்னோக்கி சென்றன. இலங்கை மாத்திரமே பொருளாதார மட்டத்தில் மோசமடைந்தது. உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலினால் நாட்டின் பொருளாதாரம் சட்டியிலிருந்து அடுப்பினுள் வீழ்ந்தது. கடந்த நவம்பர் மாதம் நாங்கள் அதிகாரத்திற்கு வந்தவுடன் வரி சுமையை குறைத்து வட்டி வீதத்தை குறைத்து பொருளாதாரத்திற்கு சேலைன் (Salaine) வழங்குவதற்கு எமக்கு நேர்ந்தது. அந்த சந்தர்ப்பத்தில் தான் கொவிட் - 19 தொற்று இலங்கைக்கு வந்தது. அதனால் எங்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய சவால் அற்பமானதல்ல. நல்லாட்சி அரசாங்கம் செய்தவற்றை இலகுவில் நியாயப்படுத்த முடியாது. அவர்கள் ஆட்சியை பொறுப்பேற்பதோடு சீன திட்டங்கள் அனைத்தையும் நிறுத்தினர். 

சீன துறைமுக நகர கட்டுமானத்தையும் கூட நிறுத்தினர். சீன முதலீட்டை பெற்றுக்கொள்ள பிரித்தானியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் கூட போராடி வரும் நிலையில் இலங்கையின் சீன முதலீடுகளுக்கு அவ்வாறு செய்தமையால் அனைத்து சர்வதேச முதலீட்டாளர்களுக்கும் தவறான கருத்தே சென்றுள்ளது. 

அது மாத்திரமன்றி அம்பாந்தோட்டை துறைமுகத்தை அமைப்பதற்கு பெற்ற ஆயிரத்து 300 மில்லியன் டொலர் கடனை செலுத்துவதற்கு முடியாதமையால் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிற்கு 200 வருடங்களுக்கு குத்தகைக்கு வழங்குவதாக உலகிற்கே அறிவித்தமையினாலும் இலங்கை பற்றி முழுமையாக தவறான கண்ணோட்டமொன்று முதலீட்டாளர்களுக்கு சென்றுள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பனை செய்தது அதற்கில்லை. சிலரின் பைகளும் இதன் மூலம் நிரப்பப்பட்டுள்ளது. 

நல்லாட்சி அரசாங்கத்தின் நுகர்விற்கு மாத்திரம் பெற்றுக்கொண்ட வர்த்தக கடன்களை பொறுத்தவரையில் ஆயிரத்து 300 மில்லியன் டொலர் என்பது சிறிய தொகையே. 2019ஆம் ஆண்டில் மாத்திரம் நல்லாட்சி அரசாங்கம் இறைமை கடன்பத்திரத்தின் ஊடாக 4 ஆயிரத்து 500 மில்லியன் டொலர் கடன் பெற்றது. அது எனது அரசாங்கம் அம்பாந்தோட்டை துறைமுகத்தின் இரண்டு கட்டங்களும், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மூன்று கட்டங்களும், கொழும்பு - மாத்தறை அதிவேக நெடுஞ்சாலை, கொழும்பு – கடுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை, மத்தல விமான நிலையம், உமா ஓய திட்டம் ஆகிய அனைத்து வேலைத்திட்டங்களுக்கும் பெற்ற கடன் தொகையை விட அதிகமாகும். 

எனினும் நல்லாட்சி அரசாங்கம் பெற்ற கடன்களினால் செய்த வேலையொன்றும் இல்லை. அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிற்கு வழங்கியமையால், கொழும்பு துறைமுகத்தில் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்க நல்லாட்சியினர் ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ளனர். அவர்கள் இன்னுமொரு முறை ஆட்சியில் இருந்திருந்தால் இந்த நாட்டில் எதுவுமே எஞ்சியிருக்காது. அரச சொத்துக்கள் அல்லது வேறு விடயங்கள் தொடர்பில் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படுவதற்கு முன்னர் அது தொடர்பிலான முன்மொழிவுகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதை கட்டாயமாக்கும் வகையிலான சட்டத்தை நாம் அறிமுகப்படுத்துவோம். 

எவ்வாறாயினும் இன்று எமக்கு இடம்பெற்றிருப்பது எஞ்சியுள்ளவற்றை ஒன்று சேர்த்து கொண்டு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதே. 1977ஆம் ஆண்டு திறந்த பொருளாதாரத்தை அறிமுகப்படுத்தி 40 ஆண்டுகளுக்கு பின்னரும் இந்த நாட்டிற்கு புதிய வருவாய் மார்க்கங்களாக இருப்பது வெளிநாட்டு பணியாளர்களிடமிருந்து கிடைக்கும் பணம் மற்றும் ஆடை கைத்தொழில் மாத்திரமே. இவ்வாறாக தொடர்ந்து பயணிக்க முடியாது. 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்தவுடன் நாம் இந்நாட்டின் பொருளாதாரத்தை புதிய பரிமாணத்திற்கு கொண்டுசெல்ல புதிய வருவாய் மார்க்கங்களை கண்டுபிடிக்க திட்டமிட்டோம். அம்பாந்தோட்டை துறைமுகத்தை அமைத்தது, கொழும்பு துறைமுக நகரை அமைத்தது, மத்தல விமான நிலையத்தை அமைத்தது, இவை அனைத்தையும் ஒன்றோடு ஒன்று இணைத்து நெடுஞ்சாலைகளை அமைத்தது இந்த நாட்டை சர்வதேச வர்த்தக மையமாக மாற்றுவதற்காகவே ஆகும். 

கொவிட் -19 தொற்று காரணமாக இலங்கை மாத்திரமன்றி முழு உலகினதும் பொருளாதாரம் சுருங்கியுள்ளது. குறுகிய காலத்தில் நாம் முகங்கொடுக்க வேண்டிய சவால் அதுவே. நாம் இதற்கு முன்னரும் இவ்வாறான சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளோம். நான் ஜனாதிபதியான பின்னர் விடுதலை புலிகள் அமைப்பு யுத்தத்தை ஆரம்பித்தது. அதன் பின்னர் 2007ஆம் ஆண்டு உலகளாவிய ரீதியில் உணவு நெருக்கடி ஏற்பட்டது. 2008ஆம் ஆண்டு, 1930ஆம் ஆண்டுகளின் பின்னர் உலகில் ஏற்பட்ட மிக மோசமான பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது. அதிலிருந்து நான்கு ஆண்டுகள் முழுவதும் உலக எண்ணெய் விலை ஒருபோதும் இல்லாத அளவிற்கு அதிகரித்தது. ஒரு சந்தர்ப்பத்தில் எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 140 அமெரிக்க டொலர் வரை அதிகரித்தது. 

அன்று அந்த அனைத்து சவால்களுக்கும் மத்தியில் நாம் யுத்தமொன்றை வெற்றி கொண்டு இந்நாட்டில் பாரிய பொருளதார வளர்ச்சியை ஏற்படுத்தினோம். 2006 – 2014 ஆண்டு வரையான காலப்பகுதியில் இந்நாட்டில் தனிநபர் வருமானம் அமெரிக்க டொலர்களில் கணக்கிடும்போது மூன்று மடங்கு அதிகரித்தது. 

Thu, 07/30/2020 - 07:03


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை