மஸ்கெலியா பிரதேச கடைகளில் அதிக விலைகளில் பொருட்கள்

மக்கள் விசனம்; அதிகாரிகள் கவனிப்பார்களா?

மஸ்கெலியா பிரதேச தோட்டங்களிலுள்ள கடைகளில் அதிக விலைகளில் சிலர் பொருட்களை விற்பனை செய்வதாக தோட்ட தொழிலாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மேலும் தோட்ட பகுதியில் இயங்கி வருகின்ற சில்லறை மற்றும் ஏனைய விற்பனை நிலையங்களிலும் பொருட்கள் அதிக விலைக்கே  விற்பனை செய்து வருவதாகவும் எந்த வித கட்டுப்பாட்டு விலைக்கும் பொருட்கள் விற்கப்படுவதில்லை குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் தோட்ட பகுதியில் இயங்கி வரும் இவ்வாறான கடைகள் பிரதேச சபைகளிலோ அல்லது பிரதேச செயலகத்திலோ பதிவு செய்யப்பட்டுள்ளதா என தெரியவில்லை.இவ்விடயம் தொடர்பாக நுவரெலியா மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் கவனம் செலுத்தி தோட்ட பகுதியில் இயங்கி வரும் கடைகளை திடீர் பரிசோதனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Fri, 07/10/2020 - 06:34


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை