நண்பர்கள் இருவருக்கிடையிலான வாக்குவாதம் கொலையில் முடிந்தது

களனி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தல்வத்த, கோணவல பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு (15) 8.30 மணியளவில் இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வாடகை அறை ஒன்றில் தங்கியிருந்த நண்பர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதன் காரணமாக இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஒருவர், மற்றொருவர் மீது கூரிய ஆயுதத்தினால் தாக்கியதை தொடர்ந்து, படுகாயமடைந்தவர், கிரிபத்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மடுல்சீம, கல்லூல்ல  பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர்கள் இருவரும் தொழில் தேடி வந்து குறித்த இடத்தில் வாடகைக்கு தங்கியிருந்ததாக தெரியவந்துள்ளது.

இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை இன்று (16) மஹர நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் எடுத்துள்ளனர்.

இக்கொலைச் சம்பவம் தொடர்பில் களனி பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Thu, 07/16/2020 - 10:41


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை