கொரோனா பீதிக்கு மத்தியில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு ஆட்கடத்தல்

- கடற்படையின் கண்காணிப்பு நடவடிக்கை தீவிரம்

கடந்த ஜூலை மாதம் 15ஆம் திகதி முதல், இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான வடக்கு கடற்பரப்பில் கண்காணிப்பு நடவடிக்கைகளை இலங்கை கடற்படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

அத்தோடு, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான கப்பல்களை சோதனை செய்து வருவதாக, வடக்கு கட்டளை பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுடன், இந்தியாவில் வசிக்கும் தமிழ் அகதிகள் சிலரும்  இந்திய கடத்தல்காரர்களும் இலங்கைக்கு தப்பி வருவது அதிகரித்துள்ளதன் காரணமாக இந்நடவடிக்கையை கடற்படை எடுத்துள்ளதாக, வடக்கு கட்டளை பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த சிலருடன் இணைந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவரை கடற்படையினரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து அண்மையில் கைது செய்திருந்ததோடு, அவர் கொவிட்-19 தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.

இந்தியாவிலிருந்து படகு மூலம் இலங்கைக்கு தப்பி வருவதற்கு பாரிய குழுவினர் தயாராகவுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு இலங்கைக்கு வருவதற்கு இருந்த குழுவினரை படகு மூலம் இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்தும் நடவடிக்கையில் இந்திய மீனவர்கள் சிலர் ஈடுபடுவதாகவும், இவ்வாறு இலங்கைக்கு அழைத்து வர, 3,000 முதல் 4,000   இந்திய ரூபாக்களை அறவிடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆகவே, இத்தகவல்கள் கிடைத்தை தொடர்ந்து, சட்டவிரோத வருகைகளை தடுக்கும் வகையில், வடக்கு கடற்பரப்பில் கண்காணிப்பு நடவடிக்கைகளை கடற்படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Sat, 07/18/2020 - 11:32


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை