புகையிரதம் மோதி ஒருவர் பலி

அம்பலாங்கொடையில் புகையிரதம் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (30), அம்பலாங்கொடை புகையிரத நிலையத்திற்கு அருகில் இவ்விபத்துச் சம்பவித்துள்ளது.

கொழும்பிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த புகையிரதம் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஊரவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில், அம்பலாங்கொடை பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Fri, 07/31/2020 - 15:15


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை