முன்னாள் புலிகளுடனான உறவு தேர்தலின் பின்னரும் தொடரும்

போராளிகள் எனும் வகையில்  வரவேற்கிறோம்

தேர்தலின் பின்பும் முன்னாள் பேராளிகளுடன் தமிழ் கூட்டமைப்பு இணைந்து செயற்படுமென தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் வடக்கிலும் கிழக்கிலும் ஜனநாயக போராளிகள் கட்சி தமக்கான ஆதரவை வழங்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்த பின்னரும் நாங்கள் இணைந்து செயற்பட தயாராகவுள்ளோம் எனவும் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டம் எவ்வாறானதாக அமையவேண்டும் என்பது குறித்து நாங்கள் திறந்த மனதுடன் பேசவுள்ளோமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் போராளிகள் என்ற அடிப்படையில் அவர்களை வரவேற்கின்றோமெனவும் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

Fri, 07/24/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை