அத்லெடிக் அணிக்கெதிரான பரபரப்பான போட்டியில் செவில்லா அணி வெற்றி

லா லிகா கால்பந்து தொடரின் அத்லெடிக் அணிக்கெதிரான பரபரப்பான போட்டியில் செவில்லா அணி வெற்றிபெற்றுள்ளது.

சேன் மேம்ஸ் விளையாட்டரங்கில் உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை இப்போட்டி நடைபெற்றது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், அத்லெடிக் அணியின் வீரரான எண்டர் கேபா 29ஆவது நிமிடத்தில் அணிக்கு முதல் கோலை பெற்றுக் கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து செவில்லா அணியின் வீரரான எவர் பெனீகா 69ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

இதன்பிறகு செவில்லா அணியின் மற்றொரு வீரரான முனிர் எல் எட்டாடி, 74ஆவது நிமிடத்தில் அணிக்காக இரண்டாவது கோலை பதிவு செய்தார்.

இதற்கமைய போட்டியின் இறுதியில், செவில்லா அணி 2--1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.

லா லிகா கால்பந்து தொடரின் புள்ளிப்பட்டியலை பொறுத்தவரை, செவில்லா அணி 63 புள்ளிகளுடன் 4ஆவது இடத்தில் உள்ளது. அத்லெடிக் அணி 48 புள்ளிகளுடன் 9ஆவது இடத்தில் உள்ளது.

Sat, 07/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை