தமிழ் பேசும் மக்கள் முதுகெலும்புள்ள வேட்பாளருக்கு வாக்களிக்க மனோ கோரிக்கை

ஆளும்கட்சியோ, எதிர்கட்சியோ பரவாயில்லை

ஆளும்கட்சியோ, எதிர்கட்சியோ முதுகெலும்புள்ள, துணிச்சலுள்ள, நாட்டின் ஜனாதிபதி முதல் பிரதமர் வரை நேருக்கு நேர் நின்று கேள்வி கேட்க கூடிய, எமது மக்களின் அபிலாஷைகளையும் துன்பங்களையும் சிங்கள மொழியில் தேசிய அரங்குகளில் எடுத்து வைக்கக்கூடிய, ஆங்கில மொழியில் சர்வதேச அரங்குகளில் எடுத்து கூறக்கூடிய வேட்பாளர்களை கண்டறிந்து அவர்களின் கட்சி சின்னத்துக்கும், அதன் பின் அந்த வேட்பாளர்களின் விருப்பு வாக்கு இலங்கங்களுக்கும் தமிழ், முஸ்லிம் மக்கள் வாக்களிக்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார். கொழும்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுவரும் பிரசார கூட்டங்களில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது, சஜித் தலைமையிலான அரசாங்கத்தை அமைக்கவே நாம் போராடுகிறோம். அந்த நம்பிக்கை எமக்கு நாளுக்கு நாள் வலுக்கின்றது. ஐ.தே.கவை கைப்பற்றுவது ஐ.தே.கவினரின் நோக்கமாக இருக்கலாம். எமது நோக்கம் அதுவல்ல, அலரி மாளிகையை கைப்பற்றுவதே நோக்கம்.  

நேர்மை, தூரப்பார்வை , அர்ப்பணிப்பு , துணிச்சல் , பன்மொழி அறிவு , விலை போகாத வரலாறு , சொந்த இனப்பற்று , சகோதர இன, மதங்களின் மீது மரியாதை, உண்மையான தேசப்பற்றுள்ள வேட்பாளர்கள் யார் என்பதை கண்டறியுங்கள். இதை கண்டறிவது ஒன்றும் கஷ்டமான காரியம் அல்ல. உங்கள் முன் வரும் வேட்பாளர்களை கொஞ்சம் கவனமாக ஒவ்வொருவராக அவதானித்து பார்த்தால் உண்மை அடையாளத்தை அறியலாம். எக்காரணம் கொண்டும் இதை கண்டறிய தவறிவிட்டீர்கள் என்றால் அடுத்து ஐந்து வருடங்கள் உங்கள் வாழ்க்கை கேள்வி குறியாகி விடும் என்றும் அவர் தெரிவித்தார். 

Sun, 07/26/2020 - 07:45


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை