விஜேதாஸ ராஜபக்ஷ பொன்னாடை போர்த்தி கௌரவிப்பு

கொழும்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிடும் முன்னாள் நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ, நேற்றுக் காலை கொழும்பு வெள்ளவத்தை அஷ்டலட்சுமி ஆலயத்தில் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டார். கட்சியின் கொழும்பு மாவட்ட தமிழ்ப் பிரிவுக்கான இணைப்பாளர் கந்தசாமி கருணாகரனின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வைபவத்தில் ஆலய அறங்காவலர்கள் சார்பில் கம்பன் கழக ஸ்தாபகர் கம்பவாரிதி இ. ஜெயராஜ், விஜேதாஸ ராஜபக்ஷவை பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

 

Wed, 07/01/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை