பொதுத் தேர்தல் சுகாதார வழிகாட்டல் வர்த்தமானி இரு தினங்களுக்குள்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் பின்பற்றப்பட வேண்டிய, கொவிட்-19 தொடர்பான சுகாதார வழிகாட்டல்கள் எதிர்வரும் இரண்டு தினங்களுக்குள் வர்த்தமானியில் வெளியிடப்படும் என, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

இன்று (16) முற்பகல், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் கலந்துகொண்ட சந்திப்பின்போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.

சுகாதார வழிகாட்டல்களை வர்த்தமானியாக வெளியிடாவிட்டால், தேர்தலை நடத்துவதில் சிரமம் ஏற்படும் என, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு பல்வேறு சந்தர்ப்பங்களிலும் சுட்டிக்காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Thu, 07/16/2020 - 12:35


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை