முச்சக்கர வண்டி- மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஒருவர் காயம்

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சோழங்கந்தை கீழ்பிரிவு நெடுஞ்சாலையில் முச்சக்கர வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று மதியம் அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவரை 1990 சுவசெரிய அம்புலன்ஸ் ஊடாக கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பண்டார தெரிவித்தார்.

காட்மோர் தம்பதென்னிய பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய நிசாந்தன் என்பவரே விபத்தில் காயமடைந்தவர். சம்பவ இடத்திற்கு மஸ்கெலியா பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் அதிகாரியான திலகரட்ண (51125) விக்ரமரட்ண (71101) ஆகிய இருவரும் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முச்சக்கரவண்டியின் சாரதி சிறு காயங்களுடன் மஸ்கெலியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், முச்சக்கர வண்டியையும், மோட்டார் சைக்கிளையும் பொலிஸ் நிலையத்தில் வைத்திருப்பதாகவும் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பண்டார தெரிவித்தார்.

மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர்

Fri, 07/24/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை