தமிழ் - முஸ்லிம் சமூகங்கள் ஒன்றுபட்டு பயணிப்பது அவசியம்

தேவைப்பாடும் உள்ளது என்கிறார் அமீர் அலி

எதிர்வரும் காலங்களில் தமிழ், முஸ்லிம் சமூகம் ஒன்றுபட்டு அரசியலில்  பயணிக்க வேண்டிய தேவைப்பாடு இந்த கால அரசியலை பொறுத்த வரையில் இருக்கின்றது  என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும்,  முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

எங்களுக்கு அழுத்தம், கஷ்டம் இருக்கின்றது. கடந்த காலத்தில் உங்களுக்கு  சிறப்பாக பணி செய்தவர்கள். எமது சமூகத்தை ஏமாற்றாமல், கொள்ளையடிக்காமல்  மரணத்திற்கு பயந்து சேவையாற்றிய தடயம் எங்கள் உள்ளத்தில் உள்ளது.

இது உண்மையாக இருக்கமாக இருந்தால், இந்த மாவட்டத்திற்கு இந்த தலைமை  பேசப்படுமாக இருந்தால், மாவட்ட மக்களுக்கு தெளிவான வழிகாட்டல், நாட்டிலுள்ள  முஸ்லிம் சமூகத்திற்கு முன் செல்கின்ற தலைவர்களுக்கு பின்புலமாக இருந்து  உங்கள் பிள்ளை உதவுவான் என்ற நம்பிக்கை இருந்தால் ஒரு புள்ளடி போடுவதில்  என்ன பிழை இருக்கின்றது.

எங்களுக்கு இருக்கின்ற பிரச்சனை எமது இருப்பை பற்றிய பிரச்சனை, தமிழ்  சமூகத்தினையும், தமிழ் தலைவர்களையும் துடைத்து எறிந்து விட்டோம் என்று  சொல்கின்றார்கள். இனி துடைத்தெறிய இருக்கின்ற ஒரேயொரு சமூகம் முஸ்லிம்  சமூகம். எனவே அந்த பட்டியிலிலே நாங்கள் போய் விடக் கூடாது.

தமிழ் சமூகத்தினர்; துடைத்து எறியப்பட்டார்கள் என்பதை நாங்கள் விட்டுக்  கொடுக்க முடியாது. எதிர்வரும் காலங்களில் இரண்டு சமூகம் ஒன்றுபட்டு  அரசியலில் பயணிக்க வேண்டிய தேவைப்பாடு இந்த கால அரசியலை பொறுத்த வரையில்  இருக்கின்றது. இதற்கு நாங்கள் எல்லோரும் சமமான முறையில் எல்லோருக்கும்  எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற நிலவரத்தில் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய  தேவைப்பாடு இருக்கின்றது.      

Tue, 07/14/2020 - 09:33


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை