முகக் கவசம் அணிந்தோருக்கு மட்டுமே பஸ்களில் அனுமதி

ஆசன எண்ணிக்கைக்கு ஏற்பவே பயணிகள் தொகை

முகக் கவசம் அணிந்தோருக்கு மட்டுமே பஸ்களில் செல்ல அனுமதிக்கப்படுவதோடு ஆசனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவே பயணிகளை ஏற்றிச்செல்ல முடியுமென தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கொமாண்டர் நிலான் மிரென்டா தெரிவித்துள்ளார்.

சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத வகையில் செயற்படும் பஸ் உரிமையாளர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சுகாதார அமைச்சினால்  வெளியிடப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை தொடர்ந்தும் பின்பற்றுமாறு பஸ் உரிமையாளர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Thu, 07/16/2020 - 07:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை