ஆற்றல் மிகுந்த தலைவர்களை பாராளுமன்றம் அனுப்பி வையுங்கள்

நுவரெலியா, ராக​ைல நகரங்களில் பிரதமர் மஹிந்த அறைகூவல்

அச்சமின்றி பொறுப்பை ஒப்படைக்கக் கூடிய ஆற்றல் மிகுந்த உறுப்பினர்களை பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்து அனுப்புவது பொதுமக்களின் கடமையென்று பிரதமர் தெரிவித்தார்.

நுவரெலியா, ராகல பிரதேசத்தில் நேற்று முற்பகல் நடைபெற்ற சந்திப்பொன்றில் கலந்துக் கொண்ட போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் கைவிடப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னோக்கி கொண்டு சென்று வேலையற்று காணப்படும் இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்துவது எமது பொறுப்பாகும். ஐந்து வருடங்களுக்கு நியமிக்கப்படும் அரசாங்கத்திற்கு எதிர்கால சந்ததியினருக்காக உள்ள நாட்டின் வளங்களை விற்பனை செய்யமுடியாது என்பதை ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசாங்கங்களும் கவனத்திற் கொண்டு செயற்பட வேண்டும்.

முறையான கொள்கையற்றவர்கள் ஆட்சிக்கு வருவதனால் நாட்டிற்கு ஏற்படும் இவ்வாறான சேதங்களை தவிர்ப்பதற்கு கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது 69 இலட்சம் மக்கள் ஒன்றிணைந்து ஏற்றுக்கொண்ட ‘சுபீட்சத்தின் நோக்கு’ வேலைத்திட்டத்தை செயற்படுத்துவதற்கு இம்முறை பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு அதிகாரத்தை பெற்றுக் கொடுக்குமாறு பிரதமர் கேட்டுக் கொண்டார். இம் மக்கள் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் சீ.பீ.ரத்னாயக்க  உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

இச் சந்திப்பில் கலந்துக் கொள்வதற்கு முன்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஸ்ரீ சாரிபுத்தாராம ரேவன பிரிவெனாவிற்கு சென்று அங்கு பிரிவெனாதிபதி பிடிகல வஜிர தேரரிடம் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டதுடன், பின்னர் ராகல, ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்திற்கு சென்று ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்.

Mon, 07/27/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை