லங்கன் ப்ரீமியர் லீக் தொடர் நடைபெறுவதில் சந்தேகம்

லங்கன் ப்ரீமியர் லீக் ரி 20 தொடரானது, எதிர்வரும் நாட்களில் நடைபெறுவதற்கான சந்தர்ப்பங்கள் கடந்த நாட்களில் உருவாகியிருந்தன.

இலங்கை கிரிக்கெட், லங்கன் ப்ரீமியர் லீக் தொடரை இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடாத்துவதற்கான திட்டங்களை வைத்திருந்தது. எனினும், கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக குறித்த முயற்சியை பிற்போட வேண்டி ஏற்பட்டது.

ஆனால், இலங்கையில் கொவிட்-19 வைரஸ் தொற்று குறைவடைந்ததனை அடுத்து இலங்கை கிரிக்கெட் சபைக்கு, லங்கன் ப்ரீமியர் லீக் தொடரை நடாத்துவதற்கான நம்பிக்கை மீண்டும் பிறந்தது. இலங்கை கிரிக்கெட் கடந்த மாதம் லங்கன் ப்ரீமியர் லீக் தொடருக்கான சில அனுசரணையாளர்களை பெற்றது என தகவல்கள் வெளியாகிய போதிலும், அது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் எதுவும் இலங்கை கிரிக்கெட் சபையின் ஊடகக் குழுவினால் இன்னும் வெளியிடப்படவில்லை.

Mon, 07/27/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை