இனவெறியுடன் பேசும் வீரர்கள் தண்டிக்கப்பட வேண்டும்: ஹோல்டர்

ஆட்டநிர்ணயம், ஊக்கமருந்து குற்றத்தைப்போல்

ஆட்டநிர்ணயம், ஊக்கமருந்து குற்றத்தைப்போல் இனவெறியுடன் பேசும் வீரர்களும் தண்டிக்கப்பட வேண்டும் என்று மேற்கிந்திய தீவு அணியின் தலைவர் ஹோல்டர் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே 4 மாதங்களுக்க்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது. ஜேசன் ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்திய தீவு அணி 3 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது.

இங்கிலாந்து-மேற்கிந்திய தீவு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் 8-திகதி சவுத்தாம்ப்டனில் உள்ள ரோஸ்பவுல் மைதானத்தில் தொடங்குகிறது. இம்மாதம் 28-ம் திகதியுடன் இந்த டெஸ்ட் தொடர் முடிகிறது.

இந்த நிலையில் ஜேசன் ஹோல்டர் மான்செஸ்டரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- ஊக்கமருந்து, ஆட்டநிர்ணயம் போன்றவற்றுக்கும், இனவெறியுடன் ஒரு வீரரை பேசுவதற்கும் எந்த விதமான வேறுபாடும் இல்லை என்றுதான் நினைக்கிறேன். இனவெறியுடன் சக வீரரை ஒரு வீரர் பேசினால், அதை ஊக்கமருந்து, ஆட்டநிர்ணய குற்றத்துக்கு இணையாகவே கருத வேண்டும்.

ஐ.சி.சி. விதிப்படி இனவெறிக் குற்றத்துக்கு வாழ்நாள் முழுவதும் விளையாட தடை விதிக்க வேண்டும். முதல்முறையாக குற்றம்செய்தால் 4 சஸ்பென்சன் புள்ளிகள் வழங்க வேண்டும். இரு புள்ளிகளுக்கு ஒரு டெஸ்ட் அல்லது இரு ஒருநாள் போட்டிகளில் விளையாட தடை செய்யப்படுவார். அந்த அடிப்படையில் 2 டெஸ்ட் அல்லது 4 ஒரு போட்டிகளில் விளையாட தடை செய்ய வேண்டும்.

ஊக்கமருந்து குறித்தும், ஊழலுக்கு எதிரான விஷயங்கள் குறித்தும் போட்டித் தொடர் தொடங்கும் முன் வீரர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுபோல் இனவெறி பேச்சு குறித்தும் கூற வேண்டும். இதன் மூலம் வீரர்களுக்கு இனவெறி பேச்சு குறித்த அதிகமான விழிப்புணர்வு களத்தில் ஏற்படும்.

கடந்த ஆண்டு தென் ஆபிரிக்க வீரர் பெலுக்வாயோவை இனவெறியுடன் பேசியதாக பாகிஸ்தான் முன்னாள் தலைவர் சர்பிராஸ் அகமதுவுக்கு 4 போட்டியில் விளையாட தடைவிதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Thu, 07/02/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை