பெலியத்தவில் புகையிரதம் மோதி ஒருவர் பலி

பெலியத்த பிரதேசத்தில் புகையிரதம் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பெலியத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெவ்தத்த மற்றும் பஹத்ஜாவ பிரதேசங்களுக்கு இடையில் 179.7 கிலோமீற்றர் மைல் கல்லுக்கு அருகில் நேற்று (22) மாலை 6.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மருதானையிலிருந்து பெலியத்த நோக்கி பயணித்த புகையிரதமே இவ்வாறு மோதியுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இச்சம்பவத்தில் ஆண் ஒருவரே உயிரிழந்துள்ளதாகவும், உயிரிழந்தவர் யார் என்பது தொடர்பில் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை. சடலம் பெலியத்த வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பெலியத்த பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Thu, 07/23/2020 - 08:52


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை