பிரதமர் மஹிந்த நாளை சாய்ந்தமருது விஜயம்

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, நாளை சாய்ந்தமருது பிரதேசத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.முன்னாள் உயர் கல்வி பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபாவின் அழைப்பின் பேரிலேயே பிரதமர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளர் மயோன் ரிஸ்லி முஸ்தபாவை ஆதரித்து சாய்ந்தமருது பௌஸி விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரசாரக்கூட்டத்தில் பிரதமர் பங்கேற்கவுள்ளார்.

இதன்போது சாய்ந்தமருது மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகின்ற தனியான நகர சபையை உருவாக்குவது தொடர்பில் அரசின் நிலைப்பாட்டை அவர் தெளிவுபடுத்துவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் எதிர்வரும் தேர்தலைத் தொடர்ந்து திகாமடுல்ல மாவட்டத்திற்கான அரசியல் அதிகாரம் மற்றும் கல்முனைப் பிராந்தியத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் பிரதமர் தெளிவுபடுத்துவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்முனை விசேட நிருபர்

Wed, 07/22/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை