அநுராதபுரம் மாவட்டத்தில் 95% வீதமான தபால்மூல வாக்களிப்பு பதிவாகியுள்ளதாக அநுராதபுரம் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி ஆர்.எம்.வன்னினாயக்க தெரிவித்தார்.
பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு கடந்த 21 ஆம் திகதி 4.00 மணியுடன் நிறைவடைந்த நிலையிலேயே மேற்படி வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. இம்முறை அநுராதபுரம் மாவட்டத்தில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு 56,458 பேர் தகுதி பெற்றுள்ளனர். அதில் 1256 பேர் தபால் மூலம் வாக்களிப்பதற்கு வரவில்லை.கொவிட் பிரச்சினை காரணமாக பிட்போடப்பட்டுள்ள ராஜாங்கனை பிரதேச செயலகத்திற்கான தபால் மூல வாக்களிப்பு நாளை 28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடாத்தப்படவுள்ளது. இதன்போது 370 பேர் வாக்களிக்கவுள்ளனர் என மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி மேலும் தெரிவித்தார்.
அநுராதபுரம் தினகரன் நிருபர்
from tkn