பத்தரமுல்லையில் 8 மணி நேர நீர் வெட்டு

பத்தரமுல்லை, பட்டபொத உள்ளிட்ட பல பகுதிகளுக்கு 08  மணித்தியால நீர் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இன்று (23) இரவு 10.00 மணி முதல் நாளை (24) காலை 6.00 மணி வரை நீர் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்தரமுல்லை, கொஸ்வத்தை, தலாஹேன, மாலபே, ஜயவடனகம, தலவத்துகொடை ஆகிய பகுதிகளில் நீர் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.

பட்டபொத நீர் தாங்கிக்கு நீர் வழங்கும் குழாயில் பராமரிப்பு வேலை முன்னெடுக்கப்படவுள்ளதன் காரணமாக, இந்நீர் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது. 

Thu, 07/23/2020 - 10:45


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை