56.46 கிலோகிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலொன்றுக்கமைய, நேற்று (06) பிற்பகல் 12.50 மணியளவில், முல்லேரியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களனிநதி மாவத்தையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
அதே பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, சந்தேகநபரிடமிருந்து ஒரு தொகைப் பணம், நிறுத்தல் கருவி, கையடக்க தொலைபேசி ஆகியவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
சந்தேகநபரை இன்றையதினம் (07) புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
முல்லேரியா பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
from tkn