விரைவில் 3-வது குழந்தைக்கு தந்தையாகிறார் டி வில்லியர்ஸ்

நட்சத்திர துடுப்பாட்ட வீரர் டி வில்லியர்ஸ், விரைவில் 3-வது குழந்தைக்குத் தந்தையாகவுள்ளார்.கடந்த வருடம் மே 23 அன்று, சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக டி வில்லியர்ஸ் அறிவித்தார். 34 வயது டி வில்லியர்ஸ் தன்னுடைய திடீர் ஓய்வு அறிவிப்பை சமூகவலைத்தளம் வழியாக அறிவித்தார்.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று, ரி 20 போட்டிகளில் விளையாடி வரும் டி வில்லியர்ஸை மீண்டும் தென் ஆபிரிக்க அணியில் இடம்பெற வைத்து, ரி 20 உலகக் கோப்பையில் விளையாட வைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. டி வில்லியர்ஸுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளார்கள். இந்நிலையில் விரைவில் 3-வது குழந்தை பிறக்கவுள்ளது.

இத்தகவலை இன்ஸ்டகிராமில் அறிவித்துள்ளார் டி வில்லியர்ஸின் மனைவி டேனியலே. ஹலோ பெண் குழந்தையே எனக் குறிப்பிட்டு தன்னுடைய சமீபத்திய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

டி வில்லியர்ஸின் மனைவிக்கு இந்திய அணி தலைவர் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

Fri, 07/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை