3 லீக்குகளிலும் 50 கோல்களுக்கு மேல் அடித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை

இங்கிலீஷ் பிரிமீயர் லீக், லா லிகா, சீரி ஏ என மூன்று லீக்குகளிலும் 50 கோல்களுக்கு மேல் அடித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை படைத்துள்ளார்.

இத்தாலியில் நடைபெற்று வரும் சீரி ஏ கிளப் கால்பந்து போட்டியின் லீக் ஆட்டத்தில் யுவென்டஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் லாஜியோவை வீழ்த்தியது.

யுவென்டஸ் அணி சார்பாக இரண்டு கோல்களையும் 51 மற்றும் 54வது நிமிடங்களில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அடித்தார்.இதுவரை 34 போட்டிகளில் விளையாடியுள்ள யுவென்டஸ் அணி 25 வெற்றி, 5 சமநிலை, 4 தோல்வி என்று 80 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. சீரி ஏ போட்டியில் ரொனால்டோ ஒட்டுமொத்தமாக இதுவரை 51 கோல்களை அடித்துள்ளார். இதன் மூலம் சீரி ஏ, லா லிகா, இங்கிலாந்து பிரிமீயர் லீக் ஆகிய மூன்று போட்டிகளில் குறைந்தது 50 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ரொனால்டோ படைத்துள்ளார்.

Thu, 07/23/2020 - 11:57


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை