மேலும் 29 உள்ளிட்ட 877 கடற்படையினர் இதுவரை குணமடைவு

கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 29 கடற்படையினர் பூரண குணமடைந்து, வைத்தியசாலைகளிலிருந்து நேற்று (02) அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 21 பேர் வெலிக்கந்த வைத்தியசாலையிலும், 06 பேர் மினுவாங்கொடை வைத்தியசாலையிலும், 02 பேர் இரணவில வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வந்தனர். குறித்த வைத்தியசாலைகளில் அவர்கள் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த வேளையில் அவ்வப்போது PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகளுக்கு அமைய, குறித்த வைரஸ் தொற்று அவர்களது உடலில் இல்லை என்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர்கள் வைத்தியசாலைகளிலிருந்து நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 877ஆக உயர்வடைந்துள்ளதாகவும், கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அவர்கள் வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ள போதிலும், சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய, மேலும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த கடற்படையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Fri, 07/03/2020 - 11:36


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை