அமீரகத்திலிருந்து 278 பேர், ஜப்பானிலிருந்து ஐவர் வருகை

- வெளிநாட்டு கப்பல் பணியாளர்கள் 24 பேர் வருகை

ஐக்கிய அரபு அமீரகத்தில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 278 பேர் இன்று (10) அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இன்று அதிகாலை 4.50 மணிக்கு இவ்விமானப் பயணிகள், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இவ்விமானப் பயணிகள், தொழில்வாய்ப்புக் கருதி அந்நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றிருந்தகளாவர்.

அத்தோடு, ஜப்பானிலிருந்து இலங்கையர்கள் 05 பேர் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இதேவேளை, வெளிநாட்டுக் கப்பலில் பணியாற்றுவதற்காக வெளிநாட்டு கப்பல் பணியாளர்கள் 24 பேர், கட்டாரிலிருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இவ்வாறு வருகை தந்த அனைவரும் விமான நிலையத்தில் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

 

Fri, 07/10/2020 - 09:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை