சுற்றிவளைப்புகளில் 2,350 பேர் கைது

கடந்த 03ஆம் திகதி இரவு 12.00 மணி முதல் நேற்றிரவு (04) 12.00 மணி வரையான 24 மணித்தியால காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 2,350 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள், ஆயுதங்கள்,  சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இச்சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களில் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட 488 பேரும், ஏனைய குற்றங்களை இழைத்த 838 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் 258 பேரும், கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் 219  பேரும், ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 25 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆயுதங்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 05 பேரும், சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 517 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சுற்றிவளைப்புகளில் ரிபிட்டர் வகை துப்பாக்கிகள் 03 உம், கைத்துப்பாக்கி 01 உம், வாள் 01 உம் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்தோடு, இந்நடவடிக்கைகளின்போது 5,422  லீற்றர் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Sun, 07/05/2020 - 14:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை