அவுஸ்திரேலியாவில் நடைபெற இருந்த 20க்கு20 உலக கிண்ணம் ஒத்திவைப்பு: ஐசிசி

கொரோனா வைரஸ் தொற்றால் அவுஸ்திரேலியாவில் நடைபெற இருந்த ஐசிசி ரி 20 ஆண்கள் உலக கிண்ணம் 2022-ம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் ரி 20 உலக கோப்பை அக்டோபர் - நவம்பரில் நடைபெற இருந்தது. கொரோனா வைரஸ் தொற்றால் போட்டியை நடத்த சாத்தியமில்லை என்று அவுஸ்திரேலிய கிரிக்கெட் வெளிப்படையாக கடந்த மாதமே தெரிவித்தது.

ஆனால் ஐசிசி அதன்பின் இரண்டு முறை கூடியது. அப்போது ரி 20 உலக கிண்ண குறித்து இறுதி முடிவு எடுக்கவில்லை. இந்நிலையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற கூட்டத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஐசிசி அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்தது.

ஐசிசி ரி 20 உலக கிண்ண 2021-ல் அக்டோபர் - நவம்பர் மாதம் நடைபெறும் என்றும், இறுதிப் போட்டி நவம்பர் 14-ல் நடக்கும் என்றும், 2022-ம் ஆண்டு டி20 உலக கோப்பை அக்டோபர் - நவம்பரில் நடைபெறும் எனவும், இறுதிப் போட்டி நவம்பர் 13-ம் திகதி நடக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் 2023 ஒருநாள் கிரிக்கெட் உலக கிண்ண இந்தியாவில் அக்டோபர் - நவம்பரில் நடைபெறும் என்றும், இறுதிப் போட்டி நவம்பர் 26-ம் திகதி நடைபெறும் எனவும் ஐசிசி தெரிவித்துள்ளது.

Wed, 07/22/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை