கொவிட்-19; மேலும் இரு கடற்படையினர் குணமடைவு

கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் இரு கடற்படையினர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இவர்களில் ஒருவர் வெலிக்கந்த வைத்தியசாலையிலும், மற்றுமொருவர் தெல்தெனிய வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்றுள்ளனர். குறித்த வைத்தியசாலைகளில் அவர்கள் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது PCR பரிசோதனை அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகளுக்கு அமைய, குறித்த வைரஸ் தொற்று அவர்களது உடலில் இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்கள் வைத்தியசாலைகளிலிருந்து நேற்று (08) வெளியேறியுள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 894ஆக உயர்வடைந்துள்ளதாகவும், கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு வைத்தியசாலைகளில் இக்கடற்படையினர் வெளியேறியுள்ள போதிலும், சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய, அவர்களை மேலும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த கடற்படையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

Thu, 07/09/2020 - 12:45


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை