காலியின் பல பகுதிகளில் 12 மணி நேர நீர் வெட்டு

காலியின் பல பகுதிகளில் இன்று (28) பிற்பகல் 2.00 மணி முதல், நாளை (29) அதிகாலை 2.00 மணி வரை, 12 மணித்தியால நீர் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இதற்கமைய ஹபராதுவ, அக்மீமண, ஹபுகல, அஹங்கம, போபே, பொத்தல, ரத்கம, தொடந்துவ பகுதிகளில் நீர் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.

காலி மாநகரத்தின் மந்தஉதாரக நீர் பம்பும் நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய மின்சார பராமரிப்பு பணி காரணமாக, நீர் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகலாமைப்புச் சபை அறிவித்துள்ளது. 

Tue, 07/28/2020 - 12:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை